• Fri. Mar 29th, 2024

சில நேரங்களில் சில மனிதர்கள்- சிறப்பு பார்வை

சிலநேரங்களில் சில மனிதர்கள்., ஜெயகாந்தனின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று அது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டு வெளியானது அதே தலைப்பில் ஜனவரி 28ஆம் தேதி வெளியாகியுள்ள படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. ஜெயகாந்தனின் கதைக்கும் இந்த சினிமாவிற்கும் தலைப்பைத்தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை.

சில நேரங்களில் சில மனிதர்கள் சினிமா ஒரு குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வெவ்வேறு வாழ்வியல் சூழல்களைக் கொண்ட மனிதர்களை ஒரு புள்ளியில் இணைக்க முயல்கிறது.


அசோக் செல்வனுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அன்பான வெள்ளந்தியானஅப்பா நாசர் மீது எப்போதும் கோபத்தை வெளிப்படுத்தும்அசோக் செல்வனுக்கு வாழ்க்கை மிகப்பெரிய இழப்பைத் தருகிறது. நடு இரவில் நடந்த ஒரு விபத்துடன் மணிகண்டன், அபிஹாசன், ரித்திவிகா தம்பதிகள் என பலரும் இணைக்கப்படுகிறார்கள். பிறகு அவரவர் மனதில் குறிப்பிட்ட அந்த விபத்து ஏற்படுத்தும் மாற்றங்களே திரைக்கதையா திரையில் விரிகிறது சில நேரங்களில் சில மனிதர்கள் நன்றாக உள்ளது.


முதல் பாதியில் அடுத்தடுத்து வரும் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒன்றோடொன்று ரசிகர்களே காட்சிகளை இணைத்து புரிந்து கொள்ள முற்பட வேண்டியிருக்கிறது.


தெளிவற்ற திரைக்கதையினால் ஒரு நல்ல கதை கொஞ்சம் வீணடிக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் இரண்டாம் பாதி ரசிகர்களை இருக்கையின் முன் பகுதிக்கு பதட்டத்துடன் வரச் செய்கிறது. தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யும் மனித மனங்கள் சின்னச் சின்ன மன்னிப்புக்கோரலால் விடுதலை பெறும் காட்சிகள் இதம். உணர்வுப்பூர்வமான முழுமையான சினிமாவாக வந்திருக்கிறது சில நேரங்களில் சில மனிதர்கள்.


சகமனிதர்கள் மீது, முக்கியமாக நமது குடும்ப உறுப்பினர்களின் மீது நாம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த வேண்டிய விதம் குறித்து பார்வையாளனுக்கு புரிய வைக்கிறது சில நேரங்களில் சில மனிதர்கள் படம்பல இடங்களில் படம் நாடகத்தன்மையுடன் இருப்பதை உணர முடிகிறது காட்சிகள் கோர்வையாக வருவதற்கு இயக்குநரை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. ஒளிப்பதிவாளரின் பங்கும் முக்கியமானது.என்றாலும் ஒரு இயல்பான சினிமாவாக காட்சிப் படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.நடிப்பை பொறுத்தவரை மணிகண்டன் இந்த சினிமாவிலும் தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திப் போயிருக்கிறார். அசோக் செல்வனின் நடிப்பில் நல்ல பக்குவம் தெரிகிறது. அசோக் செல்வனுக்கு ஜோடியாக வரும் பெண் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற உணர்வைத் தருகிறார். ரசிகர்களின் மனதில் பளிச்சென நெருக்கமாகும் சாயல் அவருடையது. நடிப்பும் பாராட்டத்தக்கது.


ஒரு தத்துவார்த்த சினிமாவை எந்த அளவிற்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடியுமோ அந்த அளவிற்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள். சில நேரங்களில் சில மனிதர்களை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

எல்லோரும் பார்க்க வேண்டிய படம்

பெயர்: சில நேரங்களில் சில மனிதர்கள்
தயாரிப்பு:எஆர் என்டர்டெயின்மென்ட்
இயக்கம்:விஷால் வெங்கட்
இசை :ரதன்
நடிப்பு:அசோக் செல்வன், அபிஹாசன், பிரவீண் ராஜா, மணிகண்டன்
வெளியான தேதி :28 ஜனவரி 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *