ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மூன்று மாவட்டங்களும் ஆந்திரா மாநிலம் ஒட்டி உள்ளது தமிழக அரசால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. மேலும் சர்க்கரை பருப்பு மற்ற அத்தியாவசிய பொருட்களும் மலிவு விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசியிலும் மலிவு விலையில் கொடுக்கக்கூடிய பருப்பு சர்க்கரை போன்ற மற்ற அத்தியாவசிய பொருட்களிலும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற தென் மாநிலங்களுக்கு ரேஷன் கடையில் வேலை செய்யும் ஊழியர்களை கைக்குள் போட்டுக்கொண்டு வெளி மாநிலங்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசியத் தேவையான உணவுப் பொருட்களை கடத்தும் கும்பல்கள் அதிகமாக பெருகி வருகின்றன.
இதில் ஒருங்கிணைந்த வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டம் முதல் அளவில் உள்ளது இங்கிருந்து ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற தென்னிந்தியா முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கடத்தல் என்பது சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இதில் வேலூர் மாநகர பகுதியை சேர்ந்த ஒரு நபர், புண்ணிய நதியான கங்கையின் பெயரை கொண்டவர் குறைந்தபட்சம் பத்து வருடங்களாக ரேஷன் பொருட்கள் கடத்தலில் முடிசூடா மன்னராக திகழ்ந்து வருகிறார்.
இவர் மீது ஏற்கனவே ரேஷன் பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக வழக்கு உள்ளது. ஆனால் இவர் தன் தொழிலில் கடமை என இன்றுவரை ஏழைகளின் அத்தியாவசிய பொருளான விலையில்லா அரிசி மற்றும் சர்க்கரை பருப்பு கோதுமை ரவை இதுபோன்ற மலிவு விலையில் கிடைக்கக்கூடிய பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து பணம் பார்ப்பதில் வல்லவர்.
இவர் மீது என்ன வழக்கு போட்டாலும் எனக்கு ஒன்றும் கவலை இல்லை நான் என் தொழில் எப்போதும் போல் நான் செய்துதான் கொண்டிருப்பேன் என்கின்ற இறுமாப்பில் இருக்கின்றார். இவர் பட்டப்பகலில் தன் மோட்டார் சைக்கிளில் ரேஷன் பொருட்கள் கடத்தி வருவது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
இது காவல்துறைக்கும் தெரியும் உணவு பாதுகாப்புத் துறைக்கும் தெரியும் அவர்களுக்கு சேர வேண்டியது சேர்ந்து விடுவதால் யாரும் ஏதும் கண்டுகொள்வதில்லை. இனியாவது பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பொருட்களில் கை வைப்பவர்கள் மேல் அரசு கை வைக்க வேண்டும் இதை மாவட்ட நிர்வாகமும் அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? என்று பொது மக்களின் கேள்வியாக உள்ளது!
- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]