• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பிரச்சனை..,

ByS.Ariyanayagam

Mar 20, 2026

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஸ்கேன் எடுத்தால் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .இதனால் நோயாளிகள் அவதி படுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர். ஸ்கேன் உடனடியாக எடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர் ஸ்கேன் எடுத்தால் இரண்டு நாட்கள் கழித்து ரிசல்ட் தருவதாக கூறுகின்றனர்.

உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் உடனடியாக ஸ்கேன் ரிசல்ட் இருந்தால் மட்டுமே தான் உரிய சிகிச்சை கிடைக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டவரை இரண்டு நாட்கள் அப்படியே வைத்துக்கொண்டு எப்படி சிகிச்சைக்கு பெறுவது என வருத்தத்துடன் பெண்கள் கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.