

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேர் குடும்பத்துக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வ-ர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விசாரணை ஆணையம் பரிந்துரையை ஏற்று அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அந்த பகுதி மக்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
அமைதியான முறையில் நடந்த இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த 22.5.2018 அன்று கலவரம் ஏற்பட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கார்த்திக், ஸ்னோலின் உள்பட 13 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த சமயத்தில் பெரும்பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைவுகள் காரணமாக பொது சொத்து, தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த சம்பவத்திற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைவுகள் காரணமாக பொது சொத்து, தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த ஆணையம் விசாரணை நடத்தி தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை சட்டசபையில் கடந்த அக்டோபர் 18-ந் தேதி அரசு சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் போலீசார் அத்துமீறி நடந்த பல அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் பற்றி விவரிக்கப்பட்டு இருந்தது. அதில், துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு போலீசார் எந்தவித முன்னெச்சரிக்கைகளையும் அறிவிக்கவில்லை.
போலீசார் நடத்திய இந்த துப்பாக்கி சூடு, வரம்பு மீறிய பொருத்தமற்ற செயல். துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தனித்தனியாகவும், கூட்டாகவும் பொறுப்பாகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. மேலும், அந்த சம்பவத்தில் போலீசார் தரப்பில் மிகை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதுதொடர்பாக 17 போலீசார் மீதும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மீதும், 3 வருவாய்த்துறை அலுவலர் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இறந்தவரின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டையும் (ஏற்கனவே ரூ.20 லட்சம் தரப்பட்டுள்ளது), காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டையும் (ஏற்கனவே ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது) வழங்கவும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்து இருந்தது.
அதைத்தொடர்ந்து சட்டசபையில் மறுநாளில் (அக்டோபர் 19-ந் தேதி) நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வ-ர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தூத்துக்குடியில் 22.5.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கடந்த 19.10.2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதல்வ-ர் மு.க.ஸ்டாலின், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வீதம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்திடும் வகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வீதம், மொத்தம் 65 லட்சம் ரூபாயை முதல்-வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வ-ர் 16-ந் தேதி (நேற்று) உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் … Read more
- கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர்களுக்கு விபத்து..,குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி … Read more
- ஒன்றிய, கர்நாடகா அரசுகளை கண்டித்து, நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்…குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்.நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள … Read more
- நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்…மதுரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.அந்த அரசன் சகல … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 261: அருளிலர் வாழி தோழி! மின்னு வசிபுஇருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடுவெஞ் … Read more
- குறள் 538:புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். பொருள் (மு.வ): சான்றோர் புகழ்ந்து சொல்லியச் … Read more
- பிஜேபியுடன் கூட்டணி முறிவு… அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்சசியை வெளிப்படுத்திய இஸ்லாமியர்கள்..,பி.ஜே.பியுடன் கூட்டணி முறித்துக் கொண்டதற்காக சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இஸ்லாமியர்கள் இனிப்பு ஊட்டி … Read more
- வாடிப்பட்டி அருகே மத்திய சிறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மறியல்..!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக சிறுமலை அடிவாரத்தில் உள்ள … Read more
- கழிவுநீரை அகற்ற லஞ்சம் கேட்ட மாநகரட்சி அதிகாரி கைது..!தொடர்ந்து இதுகுறித்து பொன்னகரம் வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர் விஜயகுமார் கணேசன் … Read more
- சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985)…சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் … Read more
- குளச்சல் படகு மூழ்கி மூன்று குமரி மீனவர்கள் மாயம்..!மீனவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆள் கடல் பகுதியில் 29. 9. 2023 அன்று மீன் … Read more
- விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருள் கண்காட்சி..!விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவின் உற்பத்திப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகிறதுவிழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி … Read more
- அக்.1 முதல் விருதுநகர் – தென்காசி இடையே மின்சார ரயிலில் பயணிக்கலாம்..!
