

கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்தால் தலா ரூ.95 ஆயிரமும், வீட்டுக்குள் மழைநீர் புகுந்தால் 4 ஆயிரத்து 800 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை வரும் என்ற சொன்ன உடனேயே, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 26-ந் தேதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து பேசி முதலில் இருந்தே தயார்நிலையில் இருந்த காரணத்தினால்தான் மழையால் ஏற்படும் பாதிப்பு குறைந்திருக்கிறது. உதாரணமாக சென்னையில் எங்குமே தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு முதல்வரின் நேரடி பார்வைதான் காரணம். கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளுக்கு முதல்-வரே நேரடியாக சென்றார். அதற்கு முன்பாக கடலூரில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோரை அங்கே இருந்து பார்வையிட சொல்லியிருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், செந்தில்பாலாஜி ஆகியோர் நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பியிருக்கிறார். மழைக்கால பணிகளை முதல்வர் நேரடியாக ஆய்வு செய்யும் காரணத்தால் மிகப்பெரிய பாதிப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்க வேண்டும்? என்று அரசாங்கத்தில் ஒரு வரையறை இருந்தால் கூட, முதல்வர் வந்த பிறகுதான் அதற்கான முடிவு தெரியும். அரசு கணக்கீட்டின்படி பார்த்தால், வீட்டுக்குள் மழைநீர் உள்ளே வந்திருந்தால் ரூ.4 ஆயிரத்து 800, குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5 ஆயிரம், பகுதியாக இடிந்திருந்தால் ரூ.4 ஆயிரத்து 100, கான்கிரீட் கட்டிடம் இடிந்திருந்தால் ரூ.95 ஆயிரம் என்பதுதான் இப்போது இருக்கும் அரசின் விதிகள். மழை பாதிப்புகளை முதல்வர் பார்வையிட்டு வந்த பின்னர், இந்த தொகைகளை உடனடியாக வழங்குவதற்கான பணிகளை செய்வோம். குறிப்பாக விவசாய நிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மழைநீர் வடிந்த உடனேயே நம்முடைய முதல்-வரிடம் கலந்துபேசி, அதிகாரிகளை துரிதப்படுத்தி நெல் விளைச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதற்கான பணிகளை செய்ய காத்திருக்கிறோம்.
கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சீபுரம், தேனி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 99 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதில் 52 ஆயிரத்து 751 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உணவு, படுக்கை வசதியை உடனடியாக வழங்கவேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் அந்த பணிகளை செய்து வருகிறது. அடுத்து ஓரிரு நாளில் வரும் என்று கூறப்பட்டிருக்கும் மழையை எதிர்கொள்வதற்கும், மாவட்ட நிர்வாகங்களுக்கும் நாங்கள் எச்சரிக்கை கொடுத்திருக்கிறோம். இப்போது எப்படி மழையை எதிர்கொண்டோமோ, அதை விட திறமையாக வருங்காலங்களில் மழையை நாங்கள் எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
- சிவகாசி மாநகராட்சி மேயரின், கணவர் சென்ற இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது…விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயராக திமுக கட்சியைச் சேர்ந்த சங்கீதா இன்பம் உள்ளார். இவரது … Read more
- சிறுவர் பூங்கா நவீன சுகாதார வளாகம்.., திறந்து வைத்தார் வெங்கடேசன் எம். எல். ஏ.மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் ரூபாய் 14.5 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் … Read more
- திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் காகிதப்பூதான்.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் கூட்டு நலச் … Read more
- தடம் புரண்டு சாலைக்கு வந்த சரக்கு ரயில்..!காஞ்சிபுரம் மாவட்டம் பழைய ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு சாலைக்கு வந்ததால், பொதுமக்கள் அலறி … Read more
- தீபாவளி பண்டிகைக்கு, 2 கோடி ரூபாய்க்கு கதர் துணிகள் விற்பனை செய்ய இலக்கு…விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் ரெங்கப்பநாயக்கன்பட்டி, மங்காபுரம், வன்னியம்பட்டி பகுதிகளில் … Read more
- தொடர் இறக்கத்தில் தங்கம்.., இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக 2000 ரூபாய்க்கும் மேல் குறைந்திருப்பது இல்லத்தரசிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.இன்று (அக்டோபர் … Read more
- கண்களைக் கட்டிக் கொண்டே கின்னஸ் சாதனை படைத்த சிறுமி..!செஸ் விளையாட்டில் சிறுமி ஒருவர் கண்களைக் கட்டிக்கொண்டே கின்னஸ் சாதனை படைத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.மலேசியாவை சேர்ந்த … Read more
- ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற இந்தியா..!ஆசிய விளையாட்டின் ஒரு பகுதியாக கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.இறுதிப்போட்டியில் … Read more
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் சாதனையின் ஊற்றுக்கண் தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 263: பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்இறை வரை நில்லா வளையும், … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 540:உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் பொருள் (மு.வ): ஒருவன் எண்ணியதை விடாமல் … Read more
- உலக விண்வெளி வாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தும், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி கல்லூரி பேராசிரியர்…நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ரமேஷ் செயற்கைக்கோள், இஸ்ரோ செயல்பாடு, விண்வெளி பயணம், … Read more
- மேக்ஸ் பிளாங்க் நினைவு தினம் இன்று (அக்டோபர் 4, 1947)…மேக்ஸ் பிளாங்க் (Max Planck) எனப் பரவலாக அறியப்பட்ட கார்ல் ஏர்ண்ஸ்ட் லுட்விக் மார்க்ஸ் பிளாங்க் … Read more
- “சாட் பூட் திரீ” திரை விமர்சனம்..!யூனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து அருணாச்சாலம் வைத்தியநாதன் இயக்கத்தில் பூவையார், கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, … Read more
