
தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பத்திவர்களில் சுமார் 57லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், மாநிலம் முழுவதும் சுமார் 1 கோடியே 63 லட்சம் பயனர்கள் விண்ணப்பத்திருந்த நிலையில், அவர்களில், 1கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மற்ற சுமார் 57 லட்சம் விண்ணப்பதாரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் வரும் 15ந்தேதி அண்ணா பிறந்த நாளில், காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அதிகாரிகளுடன், மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க விழா, நிதிநிலைமை உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசின் தலைமை செயலாளர் சிவ்டாஸ் மீனா, திட்ட சிறப்பு அதிகாரி இளம் பகவத், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் தரோஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்..
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கு மேற்பட்ட பெண்கள் ஆயிரம் ரூபாய் மாதந்தோறும், ஆண்டுந்தோறும் பெற போகிறார்கள். அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும், அதிகப்படியான பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும் இது அமைந்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்கள். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.06 கோடி பேருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டும் பொறுப்பும், கடமையும் அதிகாரிகளுக்கு இருக்கிறது.
தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரும் செப்.15 முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் வங்கி கணக்கில் ரூ.1000 உரிமைத்தொகை வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. ஆனால் ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
- BSNL சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவியப்போட்டி…மதுரையில் அக்டோபர் 1 BSNL தினத்தை முன்னிட்டு, மதுரை BSNL சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான … Read more
- குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் விஜய்வசந்த் எம். பி பங்கேற்பு..,கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் அடைக்காக்குழி பாத்திமாநகர் பகுதியில் இந்து மகா சபா சார்பில் விநாயகர் சதுர்த்தியை … Read more
- தொழில் முனைவோர் மற்றும் இளம் சாதனையார்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள்..,ஹியூமன் ரெயின்போ விஷ் பவுண்டேஷன் சார்பில், தொழில் முனைவோர் மற்றும் இளம் சாதனையார்களை கௌரவிக்கும் வகையில் … Read more
- ரூபாய் 8 கோடியில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம்..!கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மையான இந்த கோவில் … Read more
- மதுரை அண்ணாநகர் பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி…, பாதுகாப்பு கருதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே நிறுத்தம்…மதுரை அண்ணா நகர் பகுதியில் 5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “WOW MADURAI” என்ற தலைப்பில் … Read more
- உலக மோட்டார் சைக்கிள் தினம் மற்றும் மகள் தினம் (செப்டம்பர்24)யில் கன்னியாகுமரி, ஆந்திரமாநிலம் வரை இருசக்கர வாகனப்பயணம்.கன்னியாகுமரி- ஆந்திரமாநிலம் நெல்லூர், ஆங்கோர், ஹம்சலாதேவி வரை, இந்திய மோட்டார் சைக்கிள் டூர்ஸ் அசோசியேஷன் சார்பில், … Read more
- “ஒருங்கிணைந்த தையற் தொழில் கூடம் திறப்பு விழா”..!தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், ஆக்கத்தில் உருவான “வான்” … Read more
- சோழவந்தான் 8வது வார்டு இரட்டை அஹ்ரகாரத்தில் 12ம்ஆண்டு ராதாகிருஷ்ண கல்யாணம்..,சோழவந்தான் 8வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள … Read more
- பத்மஸ்ரீ இராஜா இராமண்ணா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 24, 2004)…இராஜா இராமண்ணா (Raja Ramanna) ஜனவரி 28, 1925ல் கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். தந்தையார் … Read more
- விளையாட்டை வளர்க்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம்… ‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புகழாரம்..!“நம் தேசத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பாரம்பரிய கலைகளை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை சத்குருவிடம் … Read more
- கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்..!சிவகங்கை மாவட்டம், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, சிவகங்கை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் … Read more
- மதுரையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார், பாலத்தின் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து…மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள வி.ஓ.சி. பாலத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் … Read more
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை – வைகோ பேட்டிசென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை … Read more
- ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு..!‘உலகநாயகன்’ கமல்ஹாசனும், அவரது வாரிசும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர். … Read more
- அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … Read more
