இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக காலை முதலே பல்லாயிரம் கணக்கில் குவிந்து வருகின்றனர்.

பால்குடம், காவடி, பரவ காவடி அலகு குத்தி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றன. அந்த வகையில் திருப்பரங்குன்றம் 16ஆம் கால் மண்டபடியில் பக்தர்கள் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பூக்குழி இறங்கினர்.