• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா

BySeenu

Jan 16, 2025

கோவையில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கள் விழாவை அக்கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் சிங்கை k. சந்துரு கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்பித்தார்.

பத்மபூசன் தெவ்த்திரு கேப்டன் அவர்களின் அருள் ஆசியுடன் தேமுதிக கழக பொதுசெயலாளர் மக்கள் தலைவி திருமதி அண்ணியார் அவர்களின் ஆணைப்படி
உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழாவை சிறப்புடன் கொண்டாடிவரும் நிலையில் அதன் ஒருபகுதியாக தேமுதிக சார்பில் கோவை பீளமேடு பகுதிகழகத்தின் சார்பில் பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில்
பீளமேடு பகுதிகழகம், 26 வது வட்டக்கழக செயலாளர் சிட்டி ராமச்சந்திரன் ஏற்பாட்டிலும் அக்கட்சியின் பகுதிக்கழக செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையிலும் மாபெரும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவை தேமுதிக மாநகர மாவட்ட செயலாளர் சிங்கைkசந்துரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் காலையில் பொங்கல் வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு காலை முதல் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாலையில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

மேலும் இந்த விழாவில் மாநகர் மாவட்ட துனைசெயலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் பொருளாளர் ராகவலிங்கம், அவைத்தலைவர் சக்திவேல், பொருளாளர் கோழிக்கடை தேவா, பகுதி கழக துணைசெயலாளர்கள், வடிவேல், ராஜேஷ், தங்கவேல், முத்தம்மாள், பிரதிநிதிகள் சுரேஷ்,வேல்முருகன், சுந்தரம், பகுதி மகளிர் அணி செயலாளர் சிட்டி அழகுராணி, கற்ப்பகவள்ளி, அன்னபூரணி, .வட்டக்கழக அவைத்தலைவர் பாபு, பொருளாளர் தனபால்.சிங்கை பகுதி 56 வார்டு அசன்முகமது,பாண்டி, உட்பட தேமுதிக கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.