விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் விநாயகர் கோவில் அருகே தரைப்பாலத்தின் அடிப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதையறிந்து அங்கு வந்த திருத்தங்கல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர் யார், கொலை செய்யப்பட்டு பாலத்திற்கு அடியில் தூக்கி வீசப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.