• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

பதக்கம் வென்ற காவலரின் குழந்தைக்கு காவல் ஆணையர் பாராட்டுக்கள்

ByKalamegam Viswanathan

Apr 26, 2025

மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில், காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற, காவலர் பூலாடி என்பவரின் குழந்தை பிரதீப் குமார் என்பவர், சென்னை ஆவடியில் நடைபெற்ற கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற அக்குழந்தையை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., நேரில் அழைத்து தனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார்.