• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

Byஜெ.துரை

Mar 24, 2025

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி, இந்து முன்னணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, இந்து முன்னணி அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.