மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் வணிக நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்துவதாக கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிரடி சோதனையில் ஈடுபட்ட செயல் அலுவலர் ரவி மற்றும் அலுவலர்கள் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்று பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அதிக தொகை அபராதமாக விதிக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்திர்கு எடுத்துச் செல்லப்பட்டது.