தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் பண்டிட் குருக்களால் பஞ்சாங்க படனம் நடைபெற்றது
யுகாதி வருட பிறப்பை முன்னிட்டு அனைத்து குடும்பங்களும் இறைவன் அருளாலும் குலதெய்வத்தின் ஆசியாலும் தாங்கள் விரும்பிய நல்லது யாவும் கிடைக்கப்பெற்று நோய்கள் யாவும் நீங்க பெற்று தேக ஆரோக்கியமும் மன நிம்மதியும் சந்தோஷத்தையும் தங்கள் இல்லங்களில் சீக்கிரமாக மங்கள காரியங்கள் அனைத்தும் நடக்க வேண்டியும் நிம்மதியாக இருக்க வேண்டியும் எல்லா ஜனங்களும் நட்புடன் இருக்க வேண்டியும் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு யுகாதி தின வாழ்த்துக்களை தெரிவித்தனர் பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது..