மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், பஞ்சமி மற்றும் கார்த்தி விழா கொண்டாடப்பட்டது. மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், உள்ள வராகி அம்மன் சன்னதியில், பஞ்சமி முன்னிட்டு, சிறப்பு ஹோமங்களும் அதைத் தொடர்ந்து, வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் வராஹி அம்மனுக்கு மஞ்சள் மாலை அணிவித்து வழிபட்டனர். இதே போல, மதுரை தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமி முன்னிட்டு, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், வராகி அலங்காரம் நடைபெற்றது. இதே போல, மதுரை அண்ணா நகர், யானைக் குழாய் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில், பஞ்சமி முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும், கார்த்திகை முன்னிட்டு மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், பாலமுருகனுக்கும், தாசில்நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிர
மணியருக்கும், மதுரை சாத்தமங்கலம், ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், வள்ளி, தெய்வானை சமேத பால் சுப்ரமணியருக்கும், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






