• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க 30 கண்காணிப்பு குழுக்கள்- மூன்றாம் அலையை சமாளிக்க தேவையான ஏற்பாடுகள் தயார் என மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் பேட்டி…

மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் கலந்து கொண்டு தாய்ப்பால் வார விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி…

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் மற்றும் எம்எல்ஏ மரியாதை செலுத்தினர்..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி பிஏ எம்எல்ஏ அவர்கள் மற்றும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்…

டெல்லியில் போராடும், விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டனர்…

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எட்டு மாதங்களை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக…

ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்…

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை மற்றும் கரையோரப் பகுதிகளில் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கொரோனா 3வது அலையை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு…

களையிழந்த காவிரி கரைகள். தண்ணீர் நிறைந்து சென்றும், ஆடிபெருக்கு விழாவை கொண்டாட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்…

கொரோனா பரவல் காரணமாக காவிரி கரைகளில் ஆடிபெருக்கு கொண்டாடவும், பொதுமக்கள் கூடுவதற்கும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கடந்த காலங்களில் ஆற்றில் தண்ணீர் இன்றி பாலைவனம் போல் காட்சியளித்தது, இதனால் பம்புசெட் மூலம் ஆடிபெருக்கு விழா கொண்டாடப்பட்டது. ஆனால் இந்தாண்டு ஆறு…

ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் மாதந்தோறும் நிவாரணம் வழங்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…

திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் பெண்களுக்கான அரசுப் பேருந்துகளில் இலவச பயணமாக அறிவிக்கப்பட்ட நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் ஆட்டோ தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் எங்களுக்கு மாதந்தோறும் நிவாரண தொகை வழங்க கோரி நேதாஜி சுபாஷ் சேனை மானில…

மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு…….

மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மதுரை மாநகரில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரௌடிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மதுரை மாநகர காவல் துறையினரால் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் 144 ரௌடிகள் மீது…

மதுரை மாநகரப் பேருந்து நிலையங்களில் பேக் திருடும் குற்றவாளி கைது…

சுமார் ரூபாய் 6 இலட்சம் – மதிப்புள்ள 16பவுன் தங்கநகைகள், லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல். மதுரை மாநகரப் பேருந்துநிலையங்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் பேக்குகளை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டறியமதுரை மாநகர…

சருகன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்…

இவர் நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஆவார்.

ஆக்கிரிமிப்பில் உள்ள 3 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க கூறி ஆட்சியரிடம் தலித் அமைப்புகள் வலியுறுத்தல்…

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு நீதி நாளில் தலித் விடுதலை இயக்கம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆதி தமிழர் பேரவை போன்ற தலித் அமைப்புகள் ஆட்சியரிடம் பஞ்சமி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக மனு கொடுத்துனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலித்…