• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

2 மாதங்களில் 32 வெளிநாடு தமிழர்கள் இறப்பு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி….

கடந்த 2 மாதங்களில் மட்டும் வெளிநாடு வாழ் தமிழர்கள் 32 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என்று சிறுபான்மையினர் நலன் மற்றும் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவி விடுதி ஆய்வு செய்தார்…

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது…. பாஜக எதிர்ப்புக்கு ஸ்டாலின் அரசு அடிபணிந்ததா?

சர்ச்சை பேச்சில் சிக்கிய பாதியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் அருமனையில் பழைய தேவாலயம் ஒன்று புதுப்பிக்கப்பட்டு திறப்புவிழாவிற்கு காத்திருந்தது. இந்நிலையில் அந்த தேவாலயத்தை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் தேவாலயம் திறக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து…

அம்மா மரணம் சும்மா இல்லை…..

முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அனுமார் வால் போல நிறைவடையாமல் நீண்டு கொண்டே போகிறது. இன்று வரை நீதி இறுதிப்படுத்தப்படாமல் மேலும் மாத காலத்திற்கு அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.…

ஆடிவெள்ளியில் மீனாட்சி சொக்கரை தரிசிக்க குவிந்த பக்தர்கள் ஆடி வெள்ளி பௌர்ணமி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்….

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி வெள்ளி மற்றும் பவுர்ணமியும் ஒரே நாளில் வந்திருப்பதையொட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதை அடுத்து உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சொக்க்நாதர்…

எழுவனம்பட்டி ஊராட்சித்தலைவருக்கெதிராக கொந்தளிக்கும் மன்ற உறுப்பினர்கள்….

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுவனம்பட்டி ஊராட்சியில் தலைவர் வசந்தாமணிவண்ணனுக்கு எதிராக துணைத்தலைவர் லதா உறுப்பினர்கள் முருகன் வீரலட்சுமி பெருமாள் சுதா பாண்டீஸ்வரி சுந்தர்ராஜ் தாமரைச்செல்வி சிவனேசன் ஆகியோர் வெள்ளியன்று திண்டுக்கல் ஆட்சியரிடம் புகார் கூறினர். ஊராட்சி நிர்வாகம்…

25 பள்ளி மாணவர்கள் கடத்தல் பீதி பீதியில் வேனிலிருந்து குதித்த மாணவர்கள்….

தங்களை கடத்திவிட்டதாக மினிவேன் ஆட்டோட்வில் இருந்த குதித்த பள்ளி மாணவர்கள் படுகாயம். பிள்ளைகளை கடத்தவில்லை என ஓட்டுநர் விளக்கம். தஞ்சாவூர் மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளிக்கோட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளியில்…

தனியார்மயத்திற்கெதிராக எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைக்கெதிராகவும், வேலை நிறுத்த உரிமை பறிப்பு சட்டத்திற்கு எதிராகவும், பொதுதுறை எல்.ஐ.சி, வங்கி தனியார் மயத்திற்கு எதிராகவும். இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளியன்று பிற்பகல் பெரியார் சிலை அருகில் உள்ள…

பாதுகாப்புத்துறை தனியார் மயத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம்….

பாதுகாப்புத்துறையை தனியார்மயமாக்காதே பொதுத்துறை நிறுவனங்களை விற்காதே உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. வெள்ளியன்று திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற ;இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார்பாக கே.பிரபாகரன் கே.ஆர்.கணேசன எல்.பி.எப் சார்பாக அழகர்சாமி பாலு ஏ.ஐ.டி.யு.சி. சார்பாக…

ரூ.150 கோடி மதிப்பிலான கணினி பாட புத்தகங்கள் குப்பைக்கூலமாய் அரசு கிடங்கில்….

ரூ.150 கோடி மதிப்பிலான கணினி பாடப்புத்தகங்கள் குப்பைக்கூலமாய் அரசு கிடங்கில் உள்ளதாக கணினி ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக மாநில பொதுச்செயலாளர் குமரேசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது.…

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்…..

தேவகோட்டை அருகே சான்றிதழ் கொடுப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வைரல் வீடியோவை அடுத்துகிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவு. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சண்முகநாதபட்டினத்தைச் சேர்ந்தவர் பாண்டி.விவசாயியான இவர்…