சிந்தனைத் துளிகள்
• எல்லாம் தெரியும் என்பவர்களை விட..
என்னால் முடியும் என்று முயற்சி செய்பவர்களே
வாழ்வில் வெற்றி பெறுகின்றார்கள்.
• பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம் தோல்வி
என்பது வந்து கொண்டே இருக்கும்..
பயத்தையும் தயக்கத்தையும் தூக்கி எறியுங்கள்..
வெற்றி உங்கள் காலடியில் இருக்கும்.
• திறமை மற்றும் தன்னம்பிக்கை என்ற இரண்டு ஆயுதங்கள்
மட்டும் நம்மிடம் இருந்தால் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
• தோல்வி என்பது உன்னை தூங்க வைப்பதற்காக பாடும் தாலாட்டு அல்ல.. நீ நிமிர்ந்து நிற்பதற்காக பாடும் தேசிய கீதம் போன்றது.
• சந்தேகத்தை எரித்து விடு
நம்பிக்கையை விதைத்து விடு
மகிழ்ச்சி என்பது உன்னிடம்
தானாகவே வரும்.