ஓ.பி.எஸ் சுயநலத்திற்காக சாதியைப் பயன்படுத்துகிறார் என இ.பி.எஸ்ஸின் தீவிர ஆதரவாளரும், திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான குமார் குற்றம்சாட்டியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற அதேவேளையில், திருச்சியில் இ.பி.எஸ் தீவிர ஆதரவாளரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் தமது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது..,
“ஓபிஎஸ் தனது சுயநலத்திற்காக சாதியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்”. ஓபிஎஸ், தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்திற்கு எந்த காலத்திலும், ஒரு நன்மையும் செய்ததில்லை. தற்போது அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த 19 பேர் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். அவர்களில், 2 பேர் தவிர மற்ற, 17 பேரும் எடப்பாடியின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி ஜாதி மதம் பாராமல் பணியாற்றுவார் என்று நாங்கள் அனைவரும் உறுதியாக நம்புகிறோம். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோர் தொண்டர்களின் செல்வாக்கை இழந்து விட்டனர். மக்களின் ஆதரவும் அவர்களுக்கு இல்லை. ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் உள்ளது. 95 சதவீத தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் உள்ளனர். உதிரிகள் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். அவர்களும் விரைவில் உதிர்ந்து போவார்கள்.
ஓ.பி.எஸ்-ம், அவரது மகனும் திமுகவுடன் நேரடியாகவே தொடர்பு வைத்துள்ளனர். அவர்கள் திமுகவை வெளிப்படையாக பாராட்டுவதை கண்டு தொண்டர்கள் கொந்தளித்து போய் உள்ளனர்.
வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். மீண்டும் தமிழகத்தில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும். ஓபிஎஸ், தினகரன், சசிகலா சுற்றுப் பயணங்களால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது” என்று கூறினார்.
- பட்டபகலில் வங்கியில் நகைகள் கொள்ளைசென்னை அரும்பாக்கம் வங்கி ஒன்றில் பட்டபகலில் வங்கியில் கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அரும்பாக்கம்ஃபெடரல். வங்கி […]
- ஓபிஎஸ் -டிடிவி இணைப்பு -15 ம்தேதிக்கு பிறகு முடிவுஓபிஎஸ்-டிடிவி இணையவிருப்பதாக பேசப்பட்டுவரும் நிலையில் வரும் 15ம் தேதி ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என […]
- புடின்…புடினல்ல.. உக்ரைன் உளவுத்துறைநாம் பார்ப்பது உண்மையான புடின் அல்ல என்றும் தற்போது புடினாக இருப்பவர் டூப் என்றும் உக்ரைன் […]
- எம்எல்ஏ வீட்டில் தலைகீழாக பறந்த தேசியக் கொடிகாரைக்கால் தெற்கு தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய துணை செயலாளருமான அசனா வீட்டில், […]
- அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீச்சுமதுரை விமானநிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை […]
- திண்டுக்கல்லில் சிவசேனா கட்சி ஆலோசனைக் கூட்டம்..விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் கொழுக்கட்டை மாவு வழங்க வேண்டும் […]
- சாத்தூரில் ஆடித்பெருந்திருவிழா கோலாகலம்…சாத்தூர் அருகே இருக்கன்குடியில் ஆடித்பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள […]
- சுதந்திரதினத்தை முன்னிட்டு ரஜினி வெளியிட்ட வைரல் வீடியோ75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு வெளியிட்டுள்ள வீடியோ75 வது சுதந்திர தினத்தை […]
- சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முது முனைவர் அழகுராஜா பழனிச்சாமி கண்டன அறிக்கைபாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் நாள் சென்னையில் […]
- ஸ்ரீவில்லிபுத்தூர் எருதுகட்டு விழா .. களம் காணும் காளைகள்..ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற எருதுகட்டு விழா. உற்சாகமாக […]
- தமிழக காவல் துறையில் ஆர்டர்லி முறை முடிவுக்கு வருகிறதுதமிழக காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழித்துக்கட்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்காவல்துறை பணியில் […]
- பாஜக ஆட்சியை கலாய்த்த ப.சிதம்பரம்..!சிவகங்கையில் நடைபெற்ற 75 வது சுதந்திர தினவிழா பாதயாத்திரையில் கலந்து கொண்ட ப.சிதம்பரம் பாஜக ஆட்சியை […]
- கொலை டிரைலர் வெளியீட்டு விழா தொகுப்புபாலாஜி K குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி முதன்மை கதா பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் […]
- அழகு குறிப்புகள்முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய்:
- சமையல் குறிப்புகள்ஆனியன் சப்ஜி: தேவையான பொருட்கள் : செய்முறை :முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு, […]