டெல்லியில் நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெற இருக்கும் குடியரசு தினவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் நிகழ்ச்சிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.இவ்விழாவை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளை டெல்லி மாநகர போலீசார் வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘‘15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள், 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை.
விழாவுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் உரிய வகையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.