ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்று இல்லை என்றாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
பயணிகள் RT – PCR சோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். RT – PCR பரிசோதனையானது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அத்துடன், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணத்திற்கு முன்னும், பின்னும் சோதனை மேற்கொள்ளவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.