தமிழ்மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழி சினிமாவிலும்தனது பங்களிப்பை கொடுத்து வருபவர் நடிகை செளகார் ஜானகி. இப்போதும் கூட படங்களில் நடித்துவரும் அவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும்படி நடித்து வருகிறார்.

இவரது கலைச்சேவையை பாராட்டி மத்திய அரசு தற்போது இவருக்கு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இதற்கு திரையுலகிலும் ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன திரைப்பட துறைசார்ந்த எந்தவொரு சங்கமும் இதுவரை அவரை வாழ்த்தியோ அல்லது மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கவோ இல்லை இந்த நிலையில் பத்மஸ்ரீ விருதை செளவுகார் ஜானகிக்கு வழங்கி கவுரவி்த்ததற்கு நன்றி சொல்லும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நாசர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சௌவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்..

ஓ எங்கள் ‘சவுக்கார்’ அம்மா..அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத எத்தனை நூறு படங்கள்! ஒவ்வொன்றும் முத்தாய்! ஒன்றில் கண்டது.. இன்னொன்றில் இல்லை. புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி! ‘புதிய பறவையில்’ மிரட்டியதும் மிரண்டு போனதும் ஒரே ஜோடிக்கண்களா? ஆச்சர்யம்! கண்களை மிஞ்சும் உங்கள் முத்துசிரிப்பு! அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான உங்கள் அன்பும் பாசமும்!! தாங்கள் எங்களுக்கு தந்த கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் முத்தாய் கோர்த்து அழகு பார்த்து மனமகிழ்ந்து விம்மிய எங்களுக்கு அம் முத்துமாலைக்கு பதக்கமாய் ‘பத்மஶ்ரீ’ உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை.
தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள், என்றென்றும் நீடுடி வாழ நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். ‘பத்மஶ்ரீ’ விருது அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மட்டுமே மத்திய அரசை” ஒன்றிய அரசு” என குறிப்பிட்டு வருகின்ற குழவில் நடிகர் நாசர் ஒன்றிய அரசு என்கிற வார்த்தையை பயன்படுத்தியது சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகி வருகிறது.
- திமுக ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது” – வானதி சீனிவாசன்இன்னும் 4 ஆண்டுகள்நடைபெற உள்ள திமு.க ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது ” , எம்எல்ஏவுமான […]
- கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குசிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவுசீனாவை சேர்ந்த 263 பேர்களுக்கு முறைகேடாக […]
- தி கிரே மேன் ட்ரெய்லர்… கடுப்பான தனுஷ் ரசிகர்கள்…2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக தமிழ் திரையுலகை ஹீரோவாக அறிமுகமானவர் […]
- மதுரையில் ஜூன்.4-5ம்தேதிகளில் துறவியர் மாநாடுமதுரையில் வருகின்ற ஜூன் 4 மற்றும் 5ம் தேதி துறவியர் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு […]
- வெல்கம் பேக் மோடி சொல்லவேண்டிய நிலையில் திமு.க உள்ளது.-பாஜக மாநில செயலாளர் பேட்டிதிமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கோ பேக் மோடி என்று சொன்ன நிலையில், ஆளுங்கட்சியாக வெல்கம் […]
- ஒ.பன்னீர்செல்வத்திற்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்புஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு […]
- இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைதுகழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது […]
- காங்கிரசில் இருந்து விலகிய கபில்சிபில்-சமாஜ்வாதியில் இணைந்தார்காங்கிரஸ் கட்சி கடந்த 2014, 2019 ஆகிய இரு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், […]
- 10ம் வகுப்புபடத்தால்போதும் ஆவின் நிறுவனத்தில் காத்திருக்கும் உடனடி வேலை!மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்டிரீசியன் வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், […]
- படப்பிடிப்பை முடித்து சென்னை வந்தார் நடிகர் விஜய்…நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் புது திரைப்படமானது இப்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. […]
- கண்கள் பளிச்சிட:முதலில் ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்கவும். இதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, […]
- பட்டர் சிக்கன்:தேவையான பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் – 1ஃ2 கிலோ, வெங்காயம் – 4, தக்காளி – 3, […]
- நாளை மறுநாள் பூமிக்கு அருகே வரும் விண்கல் -ஆபத்து ஏற்படுமா?பூமியை நெருங்கும் சுமார் 2 கிமீ அகலமுள்ள மிகப் பெரிய விண்கல் ஆபத்து எற்படுத்துமா என்பது […]
- சிந்தனைத் துளிகள்• ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது. • மன அமைதியில் அடங்கியதே […]
- பொது அறிவு வினா விடைகள்டஜன் என்றால் என்ன?12 பொருட்கள் குரோசு என்றால் என்ன?12 டஜன் (144 பொருட்கள்) ஸ்கோர் என்றால் […]