ஜெயலலிதாவின் பாதையில் தான் சென்று கொண்டு வருகிறேன். கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்து வருகிறேன். என் தாயும் மனைவியும் ஜெயலலிதாவை விட பலம் கொண்டவர்கள் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடியைக் கிளப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக – பாஜக மோதல் குறித்த கேள்விக்கு பதிலளித்திருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான் தலைவன் இப்படித்தான் இருப்பேன். விருப்பம் உள்ளவர்கள் இருக்கட்டும். அதற்காக என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன். ஜெயலலிதா இருக்கவில்லையா? கருணாநிதி இருக்கவில்லையா? அதேபோன்று ஆளுமையுடன் நான் இப்படித்தான் இருப்பேன் என்று சொன்ன பதில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , ’’அண்ணாமலை எப்படி தலைவரானார் என்ற விஷயத்திற்கு நான் போக விரும்பவில்லை. ஆனால் ஜெயலலிதா போன்ற தலைவர் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம். ஜெயலலிதா மாதிரி இனி ஒருவன் பிறக்கப் போவது கிடையாது. செஞ்சி கோட்டை ஏறுபவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது . ஒரு கட்சியில் கூட்டணியில் ஒரு சில உணர்ச்சிகள் இருக்கும் . அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது தான் தலைவரின் பண்பு. அதற்காக தலைவர்களே உணர்ச்சிகளை தூண்டக்கூடாது’’ என்று கூறினார்.
இந்நிலையில், கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் நடந்த மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது ஜெயக்குமாரின் பதிலடி குறித்த கேள்விக்கு, ‘’நான் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்க போவதில்லை. அதே நிலைப்பாட்டில் தான் நான் இப்போதும் இருக்கிறேன் . எப்போதும் இருப்பேன். ஜெயலலிதாவை நான் என்னுடன் ஒப்பிட்டு கூறவில்லை. அரசியல் கட்சியில் சில இடங்களில் மேனேஜர்கள் இருப்பார்கள். சில இடங்களில் தலைவர்கள் இருப்பார்கள். ஜெயலலிதா கூட டெபாசிட் போய் மீண்டும் களத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். நானும் ஜெயலலிதாவின் பாதையில் தான் சென்று கொண்டு வருகிறேன். கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்து வருகிறேன். என் தாயும் மனைவியும் ஜெயலலிதாவை விட பலம் கொண்டவர்கள்’’ என்றார்.
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள […]
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.பெரும்பள்ளம் […]
- மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் […]
- தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. […]
- திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய […]