மதுரை,தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மிதமான மற்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த சூழலில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான உத்தப்பநாயக்கனூர், சீமானூத்து, தி.விலக்கு, தொட்டப்பநாயக்கனூர்,நக்கலப்பட்டி, அல்லிகுண்டம், கணவாய்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்து வருகிறது.,

இதனால் இன்று உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்த சூழலில் மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.,
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.,



