திருச்சி மற்றும் திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.





