நவீன சாகுபடி தொழில் நுட்பத்தின் மூலமும் உயர் விளைச்சல் ரகங்கள் மூலமும் இந்தியாவில் உணவு உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்க செய்ததால் நாடு தன்னிறைவு பெற்றுள்ளது .
இந்தியாவில் 1960 களில் ஏற்பட்ட உணவு பற்றாக்குறையை பசுமை புரட்சியின் மூலம் நமது வேளாண் விஞ்ஞானிகள் நிவர்த்தி செய்தனர். இருப்பினும் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்பவும் ,விளைநிலங்கள் கட்டடங்களாக மாறி வருவதாலும், பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மாறாக தொடர்ச்சியாக பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்கள் பயன்பாட்டால் மண்ணின் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்களில் குறைபாடு ஏற்படுவதாலும், அங்கக உரங்களை பயன்படுத்தாமை அல்லது குறைத்து விடுவதாலும் பசுந்தாள் உரமிடுதல் காலத்தின் கட்டாயம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாக வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவரும் ,இணைப்பேராசிரியருமான மதன்மோகன் தெரிவித்தார் .

மண் மற்றும் பயிருக்கு எல்லா விதமான நன்மைகளை அளிக்கவல்ல அங்கக இடுபொருட்களை நாம் விவசாயத்தில் பயன்படுத்துவது மிகவும் அவசியம் .தொடர்ந்து தழை, எருக்கைளை நிலத்தில் இடுவதால் மண்ணின் கரிமம் நிலைபெறும். மண்ணில் சேரும் கரிமப் பொருட்களால் மண்புழுக்களின் வளர்ச்சியும் ,தழைச்சத்தை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியும் அதிகரிக்கின்றன. மேலும் மண்ணின் இயல்பு அடர்த்தி குறைகிறது .இதனால் உழுவது முதல் விதை முளைப்பு |பயிர் வளர்ச்சி நீர்பிடிப்பு ஆகியன எளிதாகின்றன.

எல்லா நன்மைகளையும் அளிக்க வல்ல அங்கக மூலங்களான குப்பை எரு, தொழுவுரம், கம்போஸ்ட் உரம், மண்புழு உரம், பசுந்தாள் உரம் பசுந்தைழை உரங்கள், உயிர் உரங்கள் ஆகிய இடுபொருட்களை நாம் விவசாயத்தில் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்
பசுந்தாள்களை மண்ணில் இட்டபின் பயிரிடப்படும் பயிர்களின் விளைச்சல் அதிகரிக்கின்றது. மேலும் பயிர்களுக்கான ரசாயன உரத் தேவையும் குறைகிறது.நெல் வயலில் நாற்று நடுவதற்கு 20 முதல் 25 நாட்களுக்கு முன்னரும் மற்ற நிலங்களில் விதைப்பதற்கு 30 முதல் 35 நாட்களுக்கு முன்னரும் பசுந்தாள் களை மண்ணில் இட்டு உழுது விட வேண்டும் .இதனால் மண்ணில் பயிருக்கு கிடைக்கும் துத்தநாகச் சத்து அதிகரிக்கின்றது. பசுந்தாள் உரப் பயிர்களான கோ 1 சணப்பு,கோ- 1 மணிலா, எம்டியு -1 கொழிஞ்சி, அகத்தி ஆகிய ரகங்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பசுந்தாள் உற்பத்திக்கு ஏக்கருக்கு என்றால் 10 கிலோ ,தக்கைப்பூண்டு 20 கிலோ, மணிலா அகத்தி என்றால் 15 கிலோ மற்றும் கொழிஞ்சி என்றால் 8 கிலோ போதுமானது ,பசுந்தாள் பயிர்கள் விதை உற்பத்தி செய்வதற்கு வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்கள் சிறந்ததாக இருக்கும், சுமார் 450 கிலோவிலிருந்து 550 கிலோ வரை விதை அறுவடை செய்யலாம். மேலும் பசுந்தாள் உயிர்ப்பு பொருட்களாக சுமார் 15 முதல் 20 டன் வருவதற்கும் வாய்ப்புள்ளது. பசுந்தாள் உரங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மண்ணில் வளம் மேம்படும். விளை நிலம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவது இருந்து பாதுகாக்க முடியும் என்று வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் மதன்மோகன் தெரிவித்தார்.
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]
- ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என […]
- மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!மதுரை துர்கா காலனியில் அடிப்படை வசதிகேட்டு மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை 97 […]
- டிகிரி முடித்தவரா நீங்கள்? தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை ரெடிதேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு […]
- 12 ஆண்டுக்கு பின் இன்று மேற்கே திரும்பும் கிழக்கே போன ரயில்போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே […]
- எலிசபெத் ராணியின் நினைவாக மிகப் பெரிய தங்க நாணயம் வெளியீடு…பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி […]
- நடிகர் போண்டாமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு…பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]