மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை தொடங்கியுள்ள
கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் வருகின்ற 8.8.2025 வெள்ளிகிழமை அன்று மாலை 4 மணியளவில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை தர உள்ளார்.

அவர்களுக்கு எழுச்சியான வரவேற்பு அளிப்பது குறித்து
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரில் ஏழாயிரம்பண்ணையில் கிளைக் கழகச் செயலாளர் மணிகண்டன் வளாகத்தில்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெம்பகோட்டை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பல்க் முனியசாமி* அவர்கள் பொதுச் செயலாளர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில்
ஏழாயிரம் பண்ணை சுற்றுவட்டார நிர்வாகிகள் கிளைக் கழகச் செயலாளர்,மாவட்ட மற்றும் வெம்பக்கோட்டை கிழக்குஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .