• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீச்சல் குளத்தை திறந்து வைத்த கனிமொழி கருணாநிதி..,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறக்கட்டளை மூலம் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தின் திறப்பு விழா இன்று (21/11/2025) தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை நீச்சல் வீரர்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை தாங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி:

மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும் அன்று முதலமைச்சரின் பதிவு குறித்த கேள்விக்கு, திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து மாநில உரிமைகளாக பேரறிஞர் அண்ணா, கலைஞர், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு இயக்கமாக இருக்கிறது. குறிப்பாக, சொல்ல வேண்டும் என்றால் ஒன்றிய பாஜக ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து, ஒவ்வொரு மசோதாவின் வழியாகவும், எந்தெந்த வழியில் வாய்ப்புகள் கிடைக்கிறதோ அந்தந்த வழிகளில் மாநில உரிமைகளை பறிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது.

மாநிலங்களுக்கு தரவேண்டிய நிதி பகிர்வு சரியா தருவதில்லை. மாநிலங்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகள் இப்போது மெட்ரோ திட்டம் மதுரை கோவைக்கு கேட்கப்பட்டுள்ளது அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி பல வகைகளில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. இதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். போராடுவோம் நமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக போராடுவோம்.

எஸ்.ஐ.ஆர்-யை கொண்டு வந்து, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அங்கு இருக்கக்கூடிய வாக்காளர்களின் ஓட்டுரிமை பறித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். எஸ்.ஐ.ஆர்-யை அவசர கதியில் கொண்டுவந்து, வேலை செய்பவர்களுக்கும் ஒரு பெரிய சுமையாக எஸ்ஐஆர் வேலையை முடிக்கவே முடியாத நிலையை தள்ளப்படுகின்றனர்.

அதை தாண்டி இவ்வளவு குறுகிய காலகட்டத்தில், கிட்டத்தட்ட ஆறு மாத காலத்திற்குள் எஸ்.ஐ.ஆர் பணியை செய்து முடிக்க வேண்டும். தற்போது அவசரக் கதியில் எஸ்ஐஆர் செயல்படுத்த வேண்டிய அவசியமே இல்லாத காலத்தில் இதை செயல்படுத்தி மாநிலத்தின் உரிமைகளை பறிக்கவும் எதிர்காலத்தில் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் ஆபத்தை இருக்கிறது என்பது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிர்வாக அறங்காவலர் சாலி எஸ்.நாயர், தூத்துக்குடி மெர்கன்டைல் வங்கி அறக்கட்டளை தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர்.எம்.முத்தையா, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெய ரத்தின ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.