இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளிலேயே நடிகை ஜோதிகாவை 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்ஸ் பின்தொடர்கிறார்கள்.
தமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்பும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ’36 வயதினிலே’, ‘நாச்சியார்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’படங்களில் நடித்தவர் இயக்குநர் ரா.சரவணன் இயக்கத்தில் தற்போது ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நடித்துக்கொண்டே சூர்யாவைப் போன்றே பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.