• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கார்த்திக்கை நெகிழ வைத்த தீ இவன்!

மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தீ இவன். இந்தப் படத்தில் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்,ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத், ஆகிய படங்களை இயக்கி, தயாரித்த T.M.ஜெயமுருகன் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி, இசை அமைத்து படத்தை இயக்கியும் உள்ளார்.

இப்படத்திற்கான டப்பிங் பேசி முடித்தபின் படம் பற்றிநடிகர் கார்த்திக் கூறுகையில், ‘இயக்குநர் ஜெயமுருகன் இந்தப் படத்தின் கதையைச் சொன்னபோதே கதையில் உள்ள ஆழத்தை நான் உணர்ந்தேன். தமிழ் கலாச்சாரத்தில் இருக்கும் நமது வாழ்வியலை அந்தக் கதையில் அழகாக வடிவமைத்து இருந்தார். அதேபோல் படப்பிடிப்பு சமயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் மிக நேர்த்தியாக காட்சிகளை படமாக்கினார். கொரானாவின் நெருக்கடியான நேரத்திலும் அனைத்து தேவைகளையும் எனக்கு மட்டுமல்ல படக் குழுவினர் அனைவருக்கும் செய்து கொடுத்து படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

நான் இப்படத்திற்காக டப்பிங் பேசியபோது, காட்சி அமைப்புகளையும், வசனங்களையும் மிகவும் ரசித்தேன். கதையின் உணர்வுகளை சொல்லும் விதமான பாடல் வரிகள் என்னை நெகிழ வைத்தது. ராதாரவியின் உணர்ச்சிபூர்வமான நடிப்பு, அவர் அந்தக் காட்சியில் வாழ்ந்திருப்பதாகவே உணர்த்தியது. அதோடு ஜான் விஜய்யின் சேட்டையும், சிங்கம்புலி, சரவண சக்தியோடு நான் நடித்த காமெடிக் காட்சிகளும் படம் முழுக்க சுவாரசியத்தைக் கூட்டி மிக அழகாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் நான்கு சண்டை காட்சிகளிலும் நான் நடித்துள்ளேன்.தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜெயமுருகனுக்கு இந்தத் ‘தீ இவன்’ படம் பெரிய வெற்றியைக் கொடுக்கும். அதேபோல் எனக்கும் சிறு இடைவெளிக்கு பிறகு இப்படம் தரமான படமாகவும், வெற்றிப் படமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.