நாகர்கோவிலை அடுத்த அனந்தம் பாலம்(தேசிய நெடுஞ்சாலை பகுதி சாலையில் வாகனங்கள் வேகமாக பயணித்துக்கொண்டிருந்த நேரத்தில் மழையும், சாரலாக பெய்து கொண்டிருந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் இடையே ஸ்கூட்டரை ஒருவர் ஓட்டிக்கொண்டு சென்ற நேரத்தில் ஸ்கூட்டர் திடிரென தீ பற்றி எரியவும். ஸ்கூட்டரை ஓட்டிய நபர் சாலை ஓரத்தில் ஸ்கூட்டரை விட்டு, விட்டு துள்ளி குதித்து தப்பினார் . சாலையில் அனைத்து போக்குவரத்தும் சில நொடிகள் நின்று மீண்டும் இயங்க தொடங்கியது. அந்த பகுதியில் உள்ள மக்கள் தண்ணீரை குழாய் மூலம் பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.