• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேர்தலுக்கு முன்பே கவுன்சிலர் என கல்வெட்டு: அமைச்சருக்கு செக்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே திண்டிவனம் 8வது வார்டு கவுன்சிலர் என கல்வெட்டு வைத்த விவகாரத்தில் அமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டது.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்த குடிநீர் தொட்டியில் 8வது வார்டு கவுன்சிலர் என பொறிக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யபட்டது. தமிழ்நாடு அரசு, திண்டிவனம் நகராட்சி ஆணையர், அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலளிக்க உயர்நீதிமன்றத்தில் ஆணையிட்டது. நகராட்சி தண்ணீர் தொட்டியில் கல்வெட்டு வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்தார்.