கோவையில் இந்தியாவின் சக்திவாய்ந்த குளோபல் சோலார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறுகிறது. கோவையில் செப்டம்பர் 11–12 ஆகிய தேதியில் காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை கோடிசியா ஹால் D, நடைபெற உள்ளது.
இம்மாநாட்டை EQ International Magazine (EQMagPro) மற்றும் C2Z – Net Zero & Decarbonisation Marketplace இணைந்து நடத்துகின்றன. Green and Aatmanirbhar Association) மற்றும் Indian Solar Association ஆகியவை இணைந்து உடன் வழங்குகின்றன.
இதன் முக்கிய அம்சங்களாக
வணிக, தொழில் & வீட்டு பயனாளர்களுக்கான முதலீடு இன்றிய சோலார், PM Kusum & PM Suryaghar திட்டங்கள் – முழுமையான உதவி வழங்கப்படுகிறது.
இதனை கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் ரங்கநாகி திறந்து வைக்கின்றார். மேலும் மாநில போக்குவரத்து & மின்சாரம் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், TANTRANSCO & TIDCO உயர் அதிகாரிகள் தொழில் நிறுவனத்தினர் பங்கேற்கின்றனர்.
இது குறித்து CMD ஆனந்த் குப்தா கூறுகையில் “சோலாரால் இயங்கும் மின்சார வாகனங்கள், இறக்குமதி எரிபொருள் குறைப்புகள், மற்றும் சுத்தமான ஆற்றல் மூலம் உண்மையான ஆத்மநிர்பர் பாரத் அடைய உதவுவதே எங்கள் நோக்கம் என்றார்.
