திண்டுக்கல் கலைஞர் மாளிகையில் இந்தியா கூட்டணி சார்பில்அனைத்துக் கட்சியினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான இ.பெரியசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், உணவு மற்றும் உணவுப் பொருள் வளங்கள் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் இ.பெ.செந்தில்குமார் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.




