• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

அப்போலோவில் மார்பகநல சிகிச்சை மையம் துவக்கம்

Byகுமார்

Aug 20, 2024

தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக நல சிகிச்சை மையம் (பிரஸ்ட் கிளினிக்) துவக்கப்பட்டு உள்ளது.

கலெக்டர் சங்கீதா, முதன்மைக் கல்வி அலுவ லர் கார்த்திகா குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தனர். கலெக்டர் பேசியதாவது:

மார்பக புற்றுநோய் வந்தால் வெளியில் கூறுவதில் தயக்கம் உள்ளது சுயபரிசோதனை செய்வது முக்கியம். இதனை துவக்கத்தில் கண்டறிந்தால் சரி செய்யலாம். மேற்கத்திய நாடுகளைப்போல் இன்சூரன்ஸ் வேண்டும். இது மருத்துவ செயற்கை நுண்ணறிவு
முறையால் புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பரிசோதனை அளவு ஒரு சதவீதமாகத்தான் உள்ளது. இம்மையத்தில் பெண்களின் மார்பக பிரச்னைகளுக்கு ஆலோசனை, பரிசோதனை, அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். புற்றுநோய், மகப்பேறு, ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை, கதிரியக்கம், நோயியல் டாக்டர்கள் கொண்ட குழுவுடன் செய்வதை கட்டாயமாக்க செயல்படுகிறது என்றார்.
பரிசோதனைக்கு உதவும் என்றார்.

மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரி நீலகண்ணன். வாழ்க்கை தொழில்நுட்பம் மூலம் இயங்கும் மார்பக நல பரி சோதனைக்கான ‘க்யூ ஆர்’ ஸ்கேனர் வெளியிடப்பட் டது. ஏழு கேள்விகளுக்கு 2 நிமிடத்தில் பதிலளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மகாத்மா கல்விக்குழும தலைவர் பிரேமலதா, லேடி டோக் கல்லுாரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, மகளிர் தொழில் முனை வோர் அமைப்பின் தலைவர் ராஜகுமாரி ஜீவகன், சீதாலட்சுமி கல்விக் குழும தாளாளர் பூர்ணிமா, புற்று நோய் அறுவைச் சிகிச்சை டாக்டர் பாலு மகேந்திரா, மருத்துவ சேவைகள் இணை இயக்குனர். பிரவீன் ராஜன், பொது மேலாளர்கள் கற்பகவல்லி, மணிகண்டன் பங்கேற்றனர்.