ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படையான உரிமையை என்பது போராட்டக் களங்கள் தான். அந்தப் போராட்ட களங்களில் விவசாயிகள், படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், வேலைவாய்ப்பு இழந்தவர்களின் உரிமை பாதிக்கப்படுகிற போது, அனைத்து தரப்பு மக்களும் போராட்டக் களம் தான் நமக்கு தீர்வு என்கிற அந்த வரலாறை இன்றைக்கு மடைமாற்றம் செய்கின்ற வகையில் ,இனிமேல் அடிப்படை உரிமையான போராட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ள கூடாது என்று தடுக்கும் வகையில் , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ,மாணவிகள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் மற்றும் கிளர்ச்சி பங்கேற்க தடை செய்ய ஒருங்கிணைந்த எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள கூறி கல்லூரி கல்வி இயக்கம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் சார்பில் கடந்த 17ஆம் தேதி அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களின் பங்கேற்பதை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது.
17 ஆம் தேதி போடப்பட்ட உத்தரவு நேற்றைய தினம் சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போது வெளியானது. வெளியான 2 மணி நேரத்தில் அதற்கான கண்டனங்கள் அனைத்து தரப்பிலிருந்து எதிர்ப்பு வலுக்க தொடங்கியது,
தவெக அரசின் இந்த ஜனநாயக உரிமை பறிப்பு உத்தரவை தொடங்கி போராட்டங்கள் நடந்தியதை தொடர்ந்து அதிரடியாக அந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக நேற்று கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்து உத்தரவை வெளியிட்டது
நாம் இங்கே வரலாறை நினைவு கூறுகிறோம் இந்தியா முழுவதும் தேசிய கட்சிகளின் ஆளுமையில் இருந்த போது ,தமிழகத்தில் முதன்முதலாக ஒரு மாநில சுயாட்சியை முதன்மையாக வைத்து மாநில மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை முன்வைத்து, கொள்கையை முன்வைத்து, ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வர முடியும் என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் தலைமையில் முதல் முதலாக இந்திய தேசத்திற்கே புரிய வைத்த போராட்டம் தான் இந்தி திணிப்பு போராட்டம். நாடெங்கும் நடைபெற்றது இந்த மொழி போராட்டம்
அந்த போராட்டத்தில் பங்கேற்று தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மொழிபோரா தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் நாளில் வீரவணக்கத்தை தமிழ் இனமே செலுத்தி வருவதை முதல்வர் விஜய்
அவர்கள் போராட்டக் களத்தின் வலிமையை நன்கு அறிவார்.

இப்படி கல்விக்கான உரிமையை, மொழிக்கான உரிமையை, காவேரி முல்லைப் பெரியாறு உள்ளிட்ட ஜீவாதார உரிமையை, தமிழ் இனத்திற்கான உரிமையை, தமிழ் மண்ணிற்காக உரிமையை, வேலை வாய்ப்புக்கான உரிமையை, பொருளாதரத்துக்கான உரிமையை, வறுமை ஒழிப்பு உரிமையை என அடிப்படை உரிமையை உள்ளிட்ட இந்த உரிமைகள் எல்லாம் எப்பொழுதெல்லாம் அதிகார மையத்தால் பறிக்கப்படுகின்றதோ, மறுக்கப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் இளைய சமுதாயமும், மாணவ சமுதாயம் பொங்கி எழுந்து முதன்முதலாக போராட்ட களத்திற்கு எட்டு திசை என்றும், தன்னெழுச்சியாக போராட்ட களம் அமைத்து ,உரிமை முழக்கத்தால் அதிகார மையத்தை அடிபணிய வைக்கும்.
அதிகாரம் மையத்தை அந்த போராட்டக் களத்தின் மூலமாக வெற்றிகரமாக கையாளுவதில் இளைய தலைமுறைக்கு இணையானவர்கள் இளைய தலைமுறைதான் என்பதை அவர்கள் பெற்று வருகிற வெற்றி வரலாறு நமக்கு சான்றாக இருக்கிறது.
ஜென்சி தலைமுறையின் போராட்ட வரலாறு, இளைய தலைமுறை போராட்ட வரலாற்றை முதல்வர் நன்கு அறிந்திருந்த போதிலும் ,இன்னும் ஒரு படி மேலே கண்மூடித்தனமான ஜென்சி தலை முறை, மாணவத் தலைமுறை தங்களின் நம்பிக்கையின் நாயகனாக, வாழ்க்கை வழிகாட்டியாக ,இளைய தலைமுறையின் உரிமையை மீட்டெடுக்க வந்த அவதாரம் புருஷராக, காக்க வந்த கடவுளாக,. முதல்வர் விஜய் அவர்களையும், அவருடைய தலைமையிலான தவெககட்சியும் இளைய தலைமுறைகள் கொண்டாடி வருகிற போது, அவர்களின் அடிமடியில் கை வைக்கின்ற துணிச்சல் எப்படி வந்தது என்பது நமக்குத் தெரியவில்லை?
ஒருவேளை போராட்டக்கள வலிமையை அறியாதவரா முதல்வர்?
முதல்வர் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் பங்கு எடுக்கவில்லை,மக்களுடைய உரிமைக்கான போராட்ட பட்டினி போராட்டத்தில் அவர் பங்கேற்ற இல்லை என்கிற வரலாறை நாம் மறைக்க முடியாது மறக்கவும் முடியாது அது சொன்னால் நீங்கள் அவதூறு எடுத்துக் கொள்ளக் கூடாது.
போராட்ட களத்தில் பங்கேற்றவளாக, பங்கு பெற்றவர்களாக, இருந்திருந்தால் போராட்ட களத்தில் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது, இளைஞர்கள் பங்கேற்க கூடாது என்று இப்படி அதிரடியான ஜனநாயக விரோத உத்தரவை பிறப்பிக்க துணிச்சல் வருமா? போராட்டக் களத்தில் பங்கேற்காத ,சந்திக்காத,
பார்க்காத, அறியாத ,புரியாத ஒரு முதல்வரை தானே இந்த நாடு பெற்று இருக்கிறது நாம் என்ன செய்யவது தலைவிதி.அவர்களை தானே இளைய சமுதாயம் இன்றைக்கு தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது என்ன செய்வது தமிழகத்தின் சாபக்கேடு ?இன்றைக்கு வசீகர வசனத்தினால் தமிழகம் சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது என்று வேதனையின் உச்சத்தில் தமிழகம் உள்ளது.
இன்றைக்கு 35 சதவீதம் வாக்காளர்கள் தான் இன்றைக்கு விஜய் அவர்களுக்கு ஆதரித்து வாக்களித்திருக்கலாம், 65சகவீதம் விஜய் வேண்டாம், விசில் வேண்டாம் ,தவெக வேண்டாம் என்று தான் வாக்களித்துள்ளார்கள்
ஒரு உத்தரவை அறிவித்து திரும்பப் பெறுவது என்ன நடைமுறை தெரியவில்லை? உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்னால் அதன் சாதக, பாதங்கள், விளைவுகள் இதைப்பற்றி இந்த அரசு ஆராய்ந்ததா? இல்லை ஆராய்ந்து சொல்வதற்கு இவர் கேட்பதற்கு தயாராக இருக்கிறாரா, அல்லது சொல்வதற்கு யாரும் தயாராக இல்லையா ,அல்லது இவர் கேட்பதற்கு தயாராக இல்லையா ஒன்றும் புரியவில்லை .
விஜய் மீதான ஜென்சி தலை முறை நம்பிக்கை குறைய தொடங்கி விட்டதா? அல்லது விஜய்க்கு ஜென்சி தலைமைமுறையான மாணவர்கள்,) இளைஞர்கள் மீது நம்பிக்கை குறைய தொடங்கி விட்டதா? என்பது தமிழ்நாடு மக்களுக்கு ஒன்று புரியவில்லை.
இது போன்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவது அந்த அறிவிப்புகள் மூலம் ஆளம் பார்ப்பது , களத்திலே எதிர்ப்பு எழுந்தால் அதற்குப் பிறகு அதை ரத்து செய்வது இதுதான் தவெக அரசின் 100 நாள் சாதனையாகும். எனக் கூறினார்.





