குளிர்பானங்களில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் கூட, தஞ்சாவூர் குணங்குடிதாசன் சர்பத் நிலையத்திற்கு ஈடு இணை இல்லை என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.
அப்படி என்ன இருக்கிறது இந்த தஞ்சாவூர் குணங்குடி தாசன் சர்பத்தில் என்று பார்த்தால், ஆச்சர்யத்தை அள்ளித் தருகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இந்த குணங்குடி தாசன் சர்பத் நிலையத்திற்கு ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி ஒரு பிரபலமான கடையை 80 ஆண்டுகளுக்கு முன்பு அப்துல்லா என்பவர் தொடங்கியுள்ளார். கடை தொடங்கிய போது அப்துல்லாவுக்கு ஏதாவது புதியதாக செய்ய வேண்டும் எண்ணம் எழுந்துள்ளது. அதன் படி சர்பத்தில் நார்த்தாங்காய் கலக்கும் எண்ணத்தை கொண்டு, தற்போது தஞ்சாவூரையே கலக்கி கொண்டு வருகிறார். நார்த்தாங்காய் நல்ல குலுமை அதுமட்டுமின்றி தஞ்சாவூர் பகுதிகளில் எப்போவுமே நார்தாங்காய் கிடைக்கும்.
‘பத்து பங்கு நன்னாரி வேருக்கு மூன்றரைப் பங்கு ரசம் வடிக்க வேண்டும்’னு சொல்வாங்க. நன்னாரிக்கு மட்டும் இல்லை. பால், பாதாம் பிசின், நார்த்தங்காய் இப்படி எல்லாத்துக்கும் பக்குவம் உண்டு. இந்தப் பக்குவம்தான் ருசிக்கு முக்கியக் காரணம். எல்லாத்தையும் இன்றைக்கும் தவறாமல் கடைப்பிடிக்கிறோம் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை போல. தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றாக எங்க சர்பத்தும் இடம் பிடிக்கக் காரணம் இதுதான், எங்க கடைய பத்தி நாங்களே ரொம்ப பேச விரும்பல எங்க கடைக்கு வர 90சதவீதம் பேர் ரெகுலர் கஸ்டமர் தான். அவர்களிடமே கேளுங்கள் என்று சொல்லுகிறார் கடையின் உரிமையாளர்.
மேலும் இங்கு நன்னாரி சர்பத் 25 ரூபாய்க்கும், பால் சர்பத்- மற்றும் ரோஸ் மில்க் 35 ரூபாய்க்கும், நன்னாரி பாட்டில் 90 ரூபாய்க்கும் கொடுக்கப்படுவதால் கடையில் கூட்டம் அலைமோதுகிறது.
- சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினர்க்கு பாராட்டுதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், […]
- மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவுதென்னிந்தியாவில் முதன்முறையாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு தொடங் கப்பட்டு உள்ளது […]
- பாஜக 99 -ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரச்சாரம்சோழவந்தானில் பாஜக 99 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி பிரச்சார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் […]
- மஞ்சூரில் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம்மஞ்சூர் குந்தா வட்டம் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம் மஞ்சூரில் நடைபெற்றதுகுந்தா […]
- நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் தொடர்பான சுற்றரிக்கையை திரும்பபெறுக சு. வெங்கடேசன் எம்.பிதென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்க குழு கூட்ட சுற்றறிக்கையைப் பார்த்தேன். அதில் […]
- பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்வாடிப்பட்டியில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆலோசனையின் பேரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை […]
- ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி..!உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய்கரும்பு […]
- பழனி முருகன் கோயில் வெளிப்பிரகாரத்தில் ‘கூலிங் பெயிண்ட்’அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், […]
- மரக்காணம் அருகே பறவைகள் சரணாலயம்..!விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பறவைகள் வந்து செல்லும் வலசை பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் […]
- அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது- பிரியங்கா காந்திராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அதிகார வெறி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ரியல் ஹீரோ: ஓர் உளவியல் பதிவு..! உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை […]
- நீலகிரி மாவட்ட தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்நீலகிரி மாவட்ட அரசு தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக […]
- சோழவந்தானில் புனித ரமலான் நோன்பு தராஃபி தொழுகையில் முஸ்லிம்கள்மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு தராபிக் தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 410விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர்.பொருள் (மு.வ): அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் […]