மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில், நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 18 மனுக்களும், புதிய வரி விதிப்பு வேண்டி 6 மனுக்களும், காலிமனை வரி விதிப்பு வேண்டி 1 மனுவும், வரிப் பிரிவினை வேண்டி 1 மனுவும், புதிய குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி 1 மனுவும், சொத்துவரி, ஆக்கிரமிப்பு மற்றும் சாலை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட இதர கோரிக்கைகள் வேண்டி 33 மனுக்களும், இதர மண்டலத்தைச் சார்ந்த 3 மனுக்களும் என மொத்தம் 63 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது.
இம்முகாமில், துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர் வரலெட்சுமி, செயற்பொறியாளர் .ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்செயற்பொறியாளர் (திட்டம்) காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், உதவிப் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.