திண்டுக்கல் தொகுதியை சிறப்பு பெற்ற தொகுதியாக மாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள் என ஐ பி செந்தில்குமார் பேசினார். திண்டுக்கல் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் IP.செந்தில்குமார் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள ஏ எம் சி சாலை ஆரோக்கிய மாதா தெரு போடிநாயக்கன்பட்டி தெய்வசிகாமணிபுரம் போன்ற பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு செய்தார்.

உடன் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ராஜப்பா திண்டுக்கல் மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன் திண்டுக்கல்இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட செயலாளர் மணிகண்டன் முன்னாள் நகர் மன்ற செயலாளர் நடராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பரப்புரை மேற்கொண்டனர். அப்போது அவர் திண்டுக்கல் தொகுதியை சிறப்புமிக்க தொகுதியாக மாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள் என கேட்டார்.




