பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் மிக கவனமுடன் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்.
கல்வி ஒன்றே வாழ்வை தீர்மானிக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கல்விக்கு மிகப்பெரும் பங்கு. பல கனவுகளோடு படிக்க சென்ற மாணவி ஶ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்த நிலையில் தமிழக மக்களின் கண்ணீர் அஞ்சலிகளுக்கிடையே 10 நாட்களுக்கு பிறகு இன்று உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குழந்தைகள் கண்ணாடி கோப்பையை போன்றவர்கள் என்றும் குறிப்பாக பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் கவனமுடன் கையாள வேண்டும் என புதுச்சேரி துனை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி ஏற்பாடு செய்த மனிதநேய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பணியாற்றும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது வழங்கிய பிறகு பேசிய தமிழிசை சவுந்திரராஜன், குழந்தைகள் எப்பொழுதும் தங்களது மகிழ்ச்சியை விட்டுக்கொடுக்க கூடாது என்றும் வாழ்க்கை என்பது வாழ்வதற்காக மட்டுமே முடித்து வைப்பதற்கு அல்ல என்று கூறினார். குழந்தைகள் கண்ணாடி கோப்பையை போன்றவர்கள் என தெரிவித்தவர், குறிப்பாக பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் கவனமுடன் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார். கண்ணாடி குடுவைகளை பத்திரமாக பிடிக்க வேண்டும் என தெரிவித்தவர், அழுத்தி பிடித்தாலும் உடைந்து விடும், சரியாக பிடிக்கவில்லையென்றாலும் கீழே விழுந்து உடைந்து விடும் என கூறினார். எனவே குழந்தைகளை கண்ணாடி குடுவைகளை விட பதமாக கையாள வேண்டும் என ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார். மற்றும் தற்கொலை என்றுமே தீர்வு இல்லை, அதனை மனதில் வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]