மதுரை செளராஷ்டிரா கல்லூரியில் காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி வகுப்பு கல்லூரியின் முதல்வர் முனைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது
காந்தி நினைவு அருங்காட்சியகத்தின்காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் முனைவர் ஆர்.தேவதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவர் தனது சிறப்புரையில் ” வன்முறை மூலம் கிடைக்கின்ற வெற்றி நிரந்தரமான வெற்றி ஆகாது.அஹிம்சை வழியில் போராடி பெறுகின்ற வெற்றியே நிரந்தரமான வெற்றியாகும். அகிம்சை என்பது அணுகுண்டை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது. இந்த அகிம்சை தத்துவத்தின் முக்கியத்துவத்தை தென்னாப்பிரிக்காவில் புலம் பெயர்ந்த இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் எடுத்துக் கூறியவர் மகாத்மா காந்தி. ஆகவே இவரது பிறந்த தினமான அக்டோபர் 2 உலக அகிம்சை தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக அமைதிக்கு அகிம்சை சித்தாந்தம் மிகவும் அடிப்படையாக உள்ளது. மகாத்மா காந்தி ” குழந்தைகள் உண்மை பேச வேண்டும். அகிம்சையே கடைப்பிடிக்க வேண்டும். இவர்கள் முலம் தான் உலக அமைதி சாத்தியமாகும் “என்று குறிப்பிடுகிறார்.


இன்று சமுதாயத்தில் பல பிரச்சனைகள் இருப்பதை காண முடிகின்றன. இதற்கு அடிப்படை காரணம் மனிதர்களாகிய நாம் அகிம்சையை கடைப்பிடிக்க மறந்ததே ஆகும். ஒருவன் பிறருக்கு தீங்கு செய்கின்றபோது நாளைய துன்பத்துக்கான விதையை இன்று விதைக்கிறான்” என்று பகவத் கீதை கூறுகிறது. பக்குவமான மனிதன் என்பவன் யாரையும் குறை கூற மாட்டான், தீமை செய்ய மாட்டான், தீங்கு விளைவிக்க மாட்டான், வன்முறையில் ஈடுபட மாட்டான், தான் என்ற அகந்தையும் இருக்காது. இத்தகைய பண்புகள் காந்தியடிகளின் உணர்விலும் செயலிலும் கலந்து இருந்தன”.என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய எழுத்தாளர் என்.கே அழகர்சாமி அகிம்சையின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக் கூறி , இன்றைய நவீன உலகில் அமைதியை இழந்தோம் என்பது உண்மைதான். அமைதியை நாம் விலை கொடுத்து வாங்க முடியாது. இது மனதால் மட்டும் உணர முடியும். மனதால் மட்டும் சாத்தியமாகும் .இதற்கு ஒரே வழி அகிம்சையை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறினார். செளராஷ்டிரா கல்லூரியின் காந்திய சிந்தனை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை முனைவர் எஸ்.எம்.நந்தினி தனது அறிமுக உரையில் ” காந்தியடிகள் தனது வாழ்க்கையில் உண்மை மற்றும் அகிம்சையை மிகவும் சரியாக கடைபிடித்தவர். இதனால் இன்று உலக மக்கள் அவரை நேசிக்கின்றனர், வியந்து பார்க்கின்றனர், அவர் வழியில் இன்றைய மாணவர்கள் செல்ல வேண்டும்” என்று கூறினார். இந்த சான்றிதழ் பயிற்சி வகுப்பில் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா..!
- பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அறுபடை […]
- கோவில்பட்டியில் ஆட்டோக்களுடன் போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்..!தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயக்கப்படும் மினிபேருந்துகள் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது […]
- சோழவந்தான் அருகே புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்சோழவந்தான் அருகே காடுபட்டியில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டியில் […]
- ஓபிஎஸ் வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என அறிவிப்புஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் […]
- உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல் தார்ச்சாலை.., விபத்து ஏற்படும் அபாயம்..!காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைத்துள்ளதால், விபத்து அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி […]
- தேர்வு முறைகேடுகள்-டிஎன்பிஎஸ்சி ஆலோசனை தொடங்கியதுகுரூப் 4, நில அளவர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் […]
- நாகர்கோவிலில் மாணிக்கக் கற்கள் எனக் கூறி.., பெண்களை ஏமாற்றிய பூசாரிகள் மீது வழக்கு..!நாகர்கோவிலில் மாணிக்கக்கற்கள் எனக் கூறி பெண்களை ஏமாற்றிய இரண்டு பூசாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, […]
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 148: வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் […]
- சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மதுரை […]
- பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்து தங்க நகைகள் வாங்கிய திருடன்மதுரை வாடிப்பட்டியில் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம டூப்ளிகேட் ஏடிஎம் கார்டை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் மனநிறைவு… மனநிறைவு… நாம் வாழ்வில் முன்னேறாமல் இருப்பதற்கு பல நேரங்களில் மற்றவர்களையே குறை கூறிக் […]
- அதானி விவகாரம்- 12வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்அதானி விவகாரத்தை விவாதிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து 12 வது […]
- பொது அறிவு வினா விடைகள்
- கர்நாடகாவில் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடையும் நிலையில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வமாக […]