
சோழவந்தான் அருகே ஊத்துக்குளி மற்றும் புதூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் புறநகர் வடக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊத்துக்குளி மற்றும் புதூரில் உலக பட்டினி தினத்தையொட்டி அன்னதானம் நடைபெற்றது. மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் விஷால் கிருஷ்ணா தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

உசிலை ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தார். பாலகுரு. குமார், பரமேஸ்வரி,மீனா, சோழவந்தான் பேரூர் பொறுப்பாளர்கள் கல்லாணை, சுரேஷ், பாண்டிமாணிக்கம், ராமநாதன், சங்கிலி,முத்து கண்ணன், தனசேகரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
