விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சோரம்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (35). இவருக்கு வடமலாபுரத்தில் பிரகாஷ் பைரோ டெக் என்ற பெயரில் பட்டாசு கடை உள்ளது.

இவர் அவரது பட்டாசு கடையை சுற்றிலும் வேலி அமைத்து அரசு அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்துள்ளார். இது தொடர்பாக திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.