நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட அரசு வங்கிகள் இணைந்து நடத்தும் கல்வி கடன் முகம் ஆலம்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கல்வி கடன் பெற தேவையான சான்றுகள் ஆதார் அட்டை வாக்காளர் அட்டை
ரேஷன் கார்டு கல்வித் தகுதி:10/+2 MarkSheet கல்லூரி அட்மிஷன் கடிதம் கல்லூரி கட்டணம் விவரம் ஜாதி சான்று பெற்றோரின் ஆண்டு வருமானம் கடன் பெரும் வங்கியின் பெயர் கணக்கு எண் மாணவர்கள் கொண்டு வர வேண்டும்.

இதனைத் தொடர்ந்து ஆலம்பாளையம் பேரூராட்சி தலைவர் சகுந்தலா பேரூராட்சி செயல் அலுவலர் கீதா ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பிரபாகரன் 8 வது வார்டு கவுன்சிலர் சதீஷ் தனகோபால் கவுன்சிலர் கணேசன் பேரூராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
