• Fri. Apr 26th, 2024

தீபிகா படுகோனே வாங்கிய 48 ரீடேக் எதுக்காக தெரியுமா?

இந்தியில் தீபிகா படுகோனே கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ஜெக்ராயான். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விரைவில் அமேசானில் நேரடியாக வெளியாக உள்ள இந்த படம் குறித்து தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டியில், இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக 48 முறை ரீடேக் எடுத்ததாக கூறியுள்ளார். இந்த காட்சி அந்த இடத்திலேயே திடீரென்று உருவானது என்றும் இதனால் நடிக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார் தீபிகா.

மேலும், இப்படத்தில் தீபிகா படுகோனே உடன் அனன்யா பாண்டே, சித்தார்த் சதுர்வேதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஒரு பையனுடன் இரண்டு சகோதரிகள் டேட்டிங் செய்யும் கதையில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 11ம் தேதி வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *