செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு பாஜகவை சேர்ந்த அர்ஜுனன், திமுகவை சேர்ந்த கணேசன் ஆகியோர் போட்டியிட்டனர். முன்னதாக ஊராட்சித் தலைவர் மற்றும் பாஜகவினர் அதிமுகவினர் உறுப்பினர்களை கடத்திச் சென்றிருந்தனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் கணேசன் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில் வெளியில் காத்திருந்த திமுகவினர் தங்கள் ஆதரவு உறுப்பினர்களை ஊராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறுமாறு கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் ஒருவர் மயக்கமுற்றார். இதனையடுத்து போராட்டம் தொடர்ந்தது மன்ற அலுவலகத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் வெளியேற்றி தேர்தலை நிறுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.