• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

நீர், மோர் பந்தலை அகற்றிய திமுக அதிகாரிகள்

ByM.S.karthik

Apr 22, 2025

மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு 6ஆம் பகுதி கழகம் சார்பில், புதுவிளாங்குடியில்
கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் K.ராஜு MLA திறந்து வைக்கப்பட்டு
இன்று மூன்றாவது நாளாக நீர், மோர் மக்களுக்கு வழங்கி கொண்டு இருக்கும் தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு நீர், மோர் பந்தலை திமுக அரசின் ஏவல் துறையாக இருந்து செயல்படும் மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம்- 2 அதிகாரிகள் உதவி பொறியாளர் அத்துமீறி எந்த தகவலும் சொல்லாமல் அகற்றியுள்ளனர்.

தகவல் அறிந்து சென்ற நியாயம் வேண்டி திண்டுக்கல் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட கழகத்தின் நிர்வாகிகளை காவல்துறை கைது செய்துள்ளனர்.
கட்சியினர் 25க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.