கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு 47, 47பி-ல் உள்ள நிலங்களையும், வீடுகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உடனடியாக மத்திய அரசு உரிய இழப்பீட்டு தொகை வழங்க கேட்டு, பார்வதிபுரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் அலுவலகம் முன் நடைபெற்ற தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற துணைத்தலைவர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ழூ.எஸ் ராஜேஷ்குமார் குமரி காங்கிரஸ் கமிட்டி கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர். கே.டி.உதயம், காங்கிரஸ் கமிட்டி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் .ஏஆ.பினுலால் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள் நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பேரூராட்சி தலைவர்கள்ரூ நிர்வாகிகள், ஊராட்சிமன்ற நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.