உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட நடப்பு சாம்பியனான இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் டென்மார்க் வீராங்கனை மார்டினா ரெபிஸ்காவுட்அன் ( 72வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து (7வது ரேங்க்) 21-7, 21-9 என நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிடாம்பி காந்த் (14வது ரேங்க்) 15-21, 21-18, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷி ஃபெங் லீயை (63வது ரேங்க்) போராடி வென்றார்.விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 9 நிமிடங்களுக்கு நீடித்தது.
மற்றொரு இந்திய வீரர் லக்ஷியா சென் (19வது ரேங்க்) ஜப்பானின் நிஷிமோடோ கென்டாவை (17வது ரேங்க்) வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆடவர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை 27-25, 21-17 என நேர் செட்களில் சீன தைபேவின் ஜேய் ஹூயி லி – போ-ஹவுசன் யாங் இணையை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறியது.