சென்னை மாங்காடு பகுதியில் 11ம் வகுப்பு பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியின் தற்கொலை குறித்த முதற்கட்ட விசாரணையில் கல்லூரி மாணவன் விக்னேஷ் என்பவன் மீது போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் கைது செய்து பட்டுள்ளான். மாணவியிடம் ஆபாசமாக வாட்ஸ்அப்பில் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தகவல்.