• Fri. Apr 26th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 472

குறள் 472

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல் பொருள் (மு.வ): தனக்குப்‌ பொருந்தும்‌ செயலையும்‌, அதற்காக அறிய வேண்டியதையும்‌ அறிந்து அதனிடம்‌ நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும்‌ இல்லை ஒன்றும்‌ இல்லை.

குறள் 471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் பொருள்:(மு.வ) செயலின்‌ வலிமையும்‌, தன்‌ வலிமையும்‌, பகைவனுடைய வலிமையும்‌, இருவர்க்கும்‌ துணையானவரின்‌ வலிமையும்‌ ஆராய்ந்து செய்யவேண்டும்‌.

குறள் 471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல். பொருள் (மு.வ): செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

குறள் 470

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடுகொள்ளாத கொள்ளாது உலகு பொருள் (மு.வ) தம்‌ நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம்‌ ஏற்றுக்‌ கொள்ளாது. ஆகையால்‌ உலகம்‌ இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்‌…

குறள் 469

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்பண்பறிந் தாற்றாக் கடை பொருள் (மு.வ) அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப்‌ பொருந்துமாறு செய்யாவிட்டால்‌ நன்மை செய்வதிலும்‌ தவறு உண்டாகும்‌.

குறள் 468

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும் பொருள்(மு.வ) தக்கவழியில்‌ செய்யப்படாத முயற்சி பலர்‌ துணையாக நின்று (அதை முடிக்குமாறு) காத்த போதிலும்‌ குறையாகி விடும்‌.

குறள் 467

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு பொருள் (மு. வ) செய்யத்‌ தகுந்த செயலையும்‌ வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும்‌. துணிந்தபின்‌ எண்ணிப்‌ பார்க்கலாம்‌ என்பது குற்றமாகும்‌.

குறள் 466

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும் பொருள் (மு.வ) ஒருவன்‌ செய்யத்தகாத செயல்களைச்‌ செய்வதனால்‌ கெடுவான்‌; செய்யத்தக்க செயல்களைச்‌ செய்யாமல்‌ விடுவதனாலும்‌ கெடுவான்‌.

குறள் 465

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறு பொருள் (மு.வ): செயலின்‌ வகைகளை எல்லாம்‌ முற்ற எண்ணாமல்‌ செய்யத்‌ தொடங்குதல்‌ பகைவரை வளரும்‌ பாத்தியில்‌ நிலைபெறச்‌ செய்வதொரு வழியாகும்‌.

குறள் 464

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பாடு அஞ்சு பவர் பொருள் (மு.வ) இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர்‌ ( இன்ன ஊதியம்‌ பயக்கும்‌ என்னும்‌) தெளிவு இல்லாத செயலைத்‌ தொடங்கமாட்டார்‌.